அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இறைவனே எங்களுடைய திட்டங்களின் நடுத்தூணாக இருக்கின்றான். ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள்.


உண்மையிலேயே நீங்கள் இறைவனுக்காக ஆகிவிடுவதென்றால் அந்த இறைவனும் உங்களுக்காகவே ஆகிவிடுவான் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் உறங்குகின்றபோது அவன் உங்களுக்காக விழித்திருப்பான். நீங்கள் உங்களுடைய எதிரிகளைப் பற்றி கவனமற்றிருக்கும்போது உங்களுடைய இறைவன் அவர்களைக் கண்காணித்து அவர்களுடைய சதித்திட்டங்களை முறியடிப்பான். உங்களுடைய இறைவன் எவ்வளவு வல்லமை மிக்கவன் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லை. நீங்கள் அதனை உணர்ந்திருந்தால் உலகிற்காக கவலைப்படக்கூடிய ஒருநாள் கூட உங்களுக்கு இராது. தன்னிடத்திலே ஒரு பெரும் பொக்கிஷத்தைக் கொண்டுள்ள ஒரு மனிதன் அவனிடமிருந்து ஒரு

சிலுவையின் வீழ்ச்சியும் இஸ்லாத்தின் வெற்றியும்!


ஆங்கிலேயர்கள் உலகின் பல நாடுகளை தம்வசப்படுத்தி கொண்டிருந்த காலத்தில் இந்தியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏனைய முஸ்லிம் நாடுகளிலும் கிருஸ்தவ மார்க்கம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. அக்காலத்தில் இந்தியாவை ஒரு கிருஸ்தவ நாடாக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிருஸ்தவ பிரசாரகர்கள் பெருவாரியாக இங்கு வந்திருந்தனர். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் கிருஸ்தவ மார்க்கத்தை இந்தியாவெங்கும் பரப்பும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். கிருஸ்தவ மார்க்கத்தை பரவச்செய்வதில் அப்போதைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு பெரும் ஒத்துழைப்பு தந்ததோடு அதற்க்கான எல்லா உதவிகளையும் அளித்திருந்தனர்.

மௌதூதி சாஹிபின் அபத்தமான திருக்குர்ஆன் விளக்கவுரை


திருக்குரானில் 69வது அத்தியாயம் 43 முதல் 47 வரையுள்ள வசனங்களுக்கு மௌதூதி சாஹிப் அவர்கள் செய்துள்ள தர்ஜுமாவும் அதற்க்கு அவர் வழங்கியுள்ள வியாக்யானத்தையும் கீழே தருகிறோம். இதை இஸ்லாமிக் பௌண்டேஷன் டிரஸ்ட்" வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் மூலமும்-தமிழாக்கமும் விளக்கவுரையில் இரண்டாம் பாகத்தில் பக்கம் 576-ல் காணலாம்

"மேலும் இவர் (இந்த நபி) சுயமாக இட்டுக்கட்டி ஏதேனும் ஒரு விஷயத்தை நம் பெயரில் சேர்த்து சொல்லிருந்தால், நாம் அவரது வலக்கரத்தைப் பிடித்திருப்போம். பிறகு அவருடைய பிடரி நரம்பை துண்டித்திருபோம். பிறகு

மௌலானாவின் கலப்பட மார்க்கம் - பிரிட்டீஸ் ஆட்சியும் அஹ்மதியா இயக்கமும்


அஹ்மதியா இயக்கத்திற்கெதிராக பொய்யானதும், மக்களை ஏமாற்றுவதற்கும் அடிக்கடி எதிரிகளால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் அஹ்மதியா இயக்கம் ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்பதும் ஆகும். 
"இஸ்மி" இதழின் "மௌலானா" இதே குற்றச்சாட்டை இவ்வாறு வெளிப்படுத்துகின்றார்:-
"ஆங்கிலேயர் தேசத்தைக் கைப்பற்றிய போது இந்துக்கள் ஆங்கிலேயருக்கு உடனே அடங்கிப் போய்விட்டனர். முஸ்லிம்களோ பணிந்து அடிமை வாழ்வு வாழ விரும்பவில்லை. ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்கு என்ற

இஸ்மி மௌலானாவின் கலப்பட மார்க்கம்


ஜிஹாதும் அஹ்மதிய்யா ஜமாத்தும்

இஸ்மி ஏட்டின் அக்டோபர் இதழில் அதன் ஆசிரியர் அஹ்மதியா இயக்கத்திற்கும், அதன் தூய ஸ்தாபகர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கும் எதிரான தமது காழ்ப்புணர்ச்சியை வெளியிட்டு பின்வருமாறு எழுதுகிறார்.

'ஆங்கிலேயர் விருப்பப்படி மிர்ஸா குலாம் இரண்டு காரியங்களை செய்தார். ஒன்று புனிதப் போர் என்ற பெயரில் மிக்க அலங்காரமான வார்த்தைக் கோவைகளை அமைத்து முஸ்லிம்களை தன்பக்கம் ஈர்த்தார். இரண்டாவது

மரியத்தின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து வரப்போவதில்லை


இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

மிகவும் விளக்கமாக, ஆணித்தரமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். எவரும் வானத்திலிருந்து இறங்கி இவ்வுலகிற்கு வரப்போவதில்லை. எதிர்பார்ப்பவர்களின் சந்ததியினரும் மரணித்து விடுவார்கள் ஆனால் அவர்களில் எவரும் மரியமின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து இறங்கி வருவதை காணப்போவதில்லை. அதன் பிறகு அல்லாஹ் அவர்களை நிம்மதி இழக்கச் செய்து விடுவான். அந்த சமயத்தில் உலகத்திலிருந்து சிலுவையின் ஆதிக்கம் படிப்படியாக நழுவுவதை காணலாம். அதன் பிறகு ஒரு புதிய சகாப்த்தம், புதிய நிலை உலகில் பெறும் மாற்றம் ஏற்பட்டு விடும். அதன் பிறகும் மரியமின் மகன் ஈசா (அலை) வானத்திலிருந்து வரப்போவதில்லை.