அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

தியாகத் திருநாளின் அடிப்படையும் கிறிஸ்தவர்களின் அறியாமையும்


கிருஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் ஹஜ்ஜுப் பெருநாள் அர்த்தமற்றது: உண்மையில் ஆபிரகாம் தீர்க்கதரிசியால் பலியிட அழைத்துச்செல்லப்பட்டது ஈசாக்கே தவிர இஸ்மவேல் அல்ல என்று கூறுகின்றனர்.

இவர்களின் இக்கூற்று வரலாற்றிக்கு அப்பாற்ப்பட்டதும் அவர்கள் போற்றும் பைபிளுக்கு முரண்பட்டதுமாகும்.

ஆபிரகாம் தீர்க்கதரிசியின் குமாரர்களான இஸ்மவேல் (இஸ்மாயீல் நபி) ஈசாக்கு (இஸ்ஹாக் நபி) ஆகியோரின் சந்ததியினரே

இறுதிநபி கொள்கையை கைவிட்ட தௌஹீதுவாதிகள்(?)


கடந்த 1997 டிசம்பர் மாதத்தில் சென்னையில் பிரிவுப் பெயர்கள் கூடுமா?கூடாத? என்ற தலைப்பில் ஒரு விவாதக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தற்போது தங்களுக்குள் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை தங்களுக்குள் மாறி மாறி அள்ளி வீசிக்கொண்டு சத்திய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் எத்திவைக்கப்பாடுபடுவதாக வரிந்துகட்டிக்கொண்டு பேசியும், எழுதியும் வரக்கூடிய இருபெரும் தௌஹீது(?) அறிஞர்களும், பல அறிஞர்களும் (ஆலிம்களும்) தௌஹீது(?) வாதிகளும் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த விவாதத்தில் தாங்கள்தான் தௌஹீதை உண்மையிலேயே குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் தெளிவுபடுத்தி வருகிறோம் என்று பிரகடனப்படுத்தும், பல குட்டிப்பிரிவுகளில்

நஜாத் நிர்வாகிகளின் கூற்றுக்கு பதில்!


திருச்சியில் நடைபெற்ற அந்-நஜாத் மாநாட்டில் அதன் நிர்வாகி ஜனாப்K.M.H அபூ-அப்தில்லாஹ் அவர்கள் அஹ்மதிகள் முஸ்லிம்கள் அல்ல என்பதற்கு மிகப் பெரும் சான்று ஒன்றை கூறியுள்ளார். அதாவது மிர்ஸா குலாம் அஹ்மதை நபியென்று ஒப்புக்கொள்ளாதவர்களை முஸ்லிம்கள் என்று அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர்கள் கூறினால், அதனை அவர்களது ஏடான சமாதான வழி இதழில் பிரசுரிக்கட்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்.

இதுபற்றி எங்கள் கொள்கை அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் கூறிய போதனைகளின் அடிப்படையாகும்.

விஜயபாரதம் ஏட்டிற்கு பதில்


நபிபெருமானார் (ஸல்) அவர்களின் திருமணம்.

நபி(ஸல்) அவர்கள் மீது குற்றம் சாற்ற முயன்றவர்கள் எல்லோருமே அம்மாநபி உலகுக்கு தந்த உயரிய போதனைகளிலோ குற்றம் காண முடியாத நிலையில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை, குறிப்பாக, அவர்கள் பல திருமணங்கள் செய்ததை குறை கூறுகின்றனர். 'விஜயபாரதம் ஏட்டின் ஆசிரியரும் இதற்க்கு விதிவிலக்காக இல்லை. நபி பெருமானார் அவர்கள் பல திருமணங்கள் செய்திருந்ததை இவர் எள்ளி நகையாடுகிறார்.

பூகோள ரீதியில் மட்டுமல்லாது பண்பாட்டிலும் நாகரீகத்திலும் கூட

இரண்டாவது இயேசு வந்து விட்டார்


இயேசுவின் இரண்டாவது வருகையை பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிற அடையாளங்களுக்கு முற்றிலும் முரணானவற்றில் நம்பிக்கை வைத்து கொண்டிருக்கிற கிருஸ்தவகள், மனுஷ குமாரன் (கிருஸ்தவகளின் கருத்துப்படி, இயேசு கிறிஸ்து) வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் வானத்திலுள்ள மேகங்களின் மேல் வந்திறங்குவார் என்றும், அப்போது பூமியிலுள்ளோர் யாவரும்அவரைக் கண்டு புலம்புவார்கள் என்றும், வேதாகமத்திலுள்ள சொற்களுக்கு மேலெழுந்தவாரியாக பொருள் கொண்டு பெரிய தவறிழைத்து வருகிறார்கள்.

கிருஸ்தவ சகோதரர்கள் பிரச்சாரம் செய்வதுபோல் மிகுந்த எக்காளத்தோடும், மிகுந்த வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் மனுஷ குமாரன்