அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

பி.ஜேயின் அட்டகாசம் - கமர் என்ற சொல்லை அல்லாஹ் முதல் பிறைக்கு பயன்படுத்தியுள்ளானா?


பொய்யன் பி.ஜே யின் கேள்வி:-

கமர் என்ற சொல் மூன்று நாட்களுக்கு பிறகு உள்ள பிறைக்குத்தான் சொல்லப்படும். இது அன்று முதல் இன்று வரை அனைத்து அரபுகளும் ஒன்று பட்டுக் கூறும் கருத்தாகும். இதற்க்கு மாற்றமாக அரபு மொழி அறிஞ்சர் யாரும் சொன்னதில்லை. மொழி அறியாத மடையன் தான் இதற்க்கு மாற்றமாக சொல்வான் என்று மிர்ஸா குலாம் நூருல் ஹக் இல் எழுதியுள்ளான். ஆனால் கமர் என்ற வார்த்தையை அல்லாஹ் முதல் பிறைக்கும் பயன்படுத்தியுள்ளானே என்று ஏராளமான சான்றுகளுடன் கேள்வி கேட்டோம். அல்லாஹ்வையே விமர்சனம் செய்பவனும் இல்லாததை இட்டுக் கட்டும் மடையனும்(நவூதுபில்லாஹ்) எப்படி நபியாக இருக்க முடியும் என்று கேட்ட போதும் அவர்களிடம் பதில் இல்லை.

கோவை விவாதத்தில் பி.ஜே எழுப்பிய எல்லாக் கேள்விகளுக்கும் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் பதில் கூறியது. இமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மை தன்மைக்கு இறைவன் காட்டிய அற்புத அடையாளத்தை (சூரிய சந்திர கிரகணம்) மறுத்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்து விட்ட காரணத்தால்தான் இந்த ஆட்சேபனையை கிளப்பி இருக்கிறான்.

மூன்று இரவுகளுக்கு மேற்பட்ட இரவில் தோன்றும் சந்திரனுக்குத்தான் 'கமர்' என்று அரபியில் கூறப்படும். மூன்று நாள் வரை அதனை 'ஹிலால்' என்பார்களே தவிர 'கமர்' என்று கூறமாட்டார்கள். சிலருடைய கருத்தின்படி ஏழு நாள் வரை 'ஹிலால்' என்றே அழைக்கப்படும். 'லிசானுல் அரப்' எனும் பிரசித்திப் பெற்ற அரபிமொழி அகராதியில் 'கமர்' என்ற சொல்லின், சொல் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 'ஹுவ பஹத ஸலாசி லயாவின் இலா ஆகிரிஷ் ஷஹ்ர்" அதாவது மூன்றாவது இரவுக்கு பின்னுள்ள இரவிலிருந்து மாதத்தின் கடைசியில் தோன்றும் சந்திரனுக்கு கமர் என்று கூறப்படும். (நான்காவது இரவிலிருந்து கடைசி வரையுள்ள சந்திரனே கமர் என்றழைக்கப்படும். முதல் மூன்று இரவில் தோன்றும் சந்திரனை கமர் என அழைக்கமுடியாது).

முதலிரவில் தோன்றும் சந்திரன் 'கமர்' ஆக இல்லாதிருக்கும்போது 'கமர்' என்ற சொல்லின் பெயருக்கான காரணம் அதில் இல்லாதிருக்கும் போது (கமர் என்ற சொல்லின் பொருள் மிகுந்த ஒளிமிக்கது என்பதாகும்.) கமருக்கு முதலிரவில் கிரகணம் ஏற்படும் என்று கூறுவது எங்கனம் சரியாகும்)

அவ்வாறு கூறுவது எப்படிப்பட்டதென்றால், ஒரு இளம் பெண் முதலிரவிலேயே கற்பமாகிவிட்டால் என்று ஒருவர் கூறியதை செவியுற்ற ஒரு மௌலவி, முதலிரவில் கர்ப்பமானால் என்பதன் பொருள் அப்பெண் பிறந்த அதே இரவில் கர்ப்பமானால் என்பதுதான் என்று பிடிவாதமாகக் கூறினால் அது சரியான பொருளாகுமா? எவராவது அந்த மௌலவியிடம், பிறந்த முதலிரவில் அவள் பெண் என்றே அழைக்கப்படமாட்டாளே, மாறாக அவளை 'சபிய்யா' அல்லாது குழந்தை என்றே குறிப்பிடுவார்கள். அவ்வாறிருக்க அவள் கருவுற்றதாகக் கூறுவது எவ்வளவு பேதைமை?" என்று கூறமாட்டாரா என்ன? மேலும் இங்கு முதல் இரவு என்பதன் பொருள் திருமணம் முடிந்தபின் முதன்முறையாக ஒரு பெண் தன் கணவனிடத்தில் செல்லக்கூடிய இரவுதான் என்பதை அறிவுடையோர் நன்கறிவார்கள்.

ரமளானில் முதல் பிறை பார்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கமிட்டியை 'ஹிலால் கமிட்டி' என்றே பெயர் வைத்திருப்பதை நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் 'கமர் கமிட்டி' என்று பெயர் வைத்ததாக நாம் எங்கும் பார்க்க முடியாது.

இந்தப் பொய்யர் திருக்குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டினால் அதற்கான விளக்கத்தை நாம் கொடுப்போம்